பதில் சொல்லுங்க முதல்வரே… அந்த பொண்ணு வாழ்க்கை திரும்ப கிடைக்குமா…? பாஜக தலைவர் சரமாரி கேள்வி…!!
SeithiSolai Tamil November 04, 2025 06:48 PM

தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, குற்றங்கள் பெருகிவிட்டதாக நயினார் சாடியுள்ளார். “குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதால் யாருக்கு என்ன பயன்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே நடந்த இழப்பை மீட்கவோ, மக்களின் அச்சத்தைப் போக்கவோ, அல்லது இதுபோல இனி ஒரு சம்பவம் நடக்காது என்று உறுதி அளிக்கவோ, இந்த நடவடிக்கை உதவாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலமைச்சரே பதில் சொல்லுங்கள் என்று வலியுறுத்திய நயினார், சரியான நிர்வாகம் இல்லாதபட்சத்தில் குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை அழுத்தமாகக் கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கைப் பேணுவதே அரசின் முதற்கடமை என்றும், அதில் தோல்வி கண்டால், பிறகு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் பலனளிக்காது என்றும் அவர் ஆவேசமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.