சென்னையில் பிறந்து 3 மாதமே ஆன பெண் குழந்தையை வறுமை காரணமாக விற்க முயன்ற தாய்-தந்தை உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துரைப்பாக்கம் கண்ணகி நகர் எழில் நகரை சேர்ந்த ஸ்ரீஜி (27), பெயிண்டர்; மனைவி வினிஷா (23). இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த மே மாதம் நான்காவது குழந்தையும் பெண் குழந்தையாகப் பிறந்தது.
வறுமையால் நான்காவது குழந்தையை வளர்க்க முடியாது என முடிவு செய்த தம்பதியினர், அந்த 3 மாத குழந்தையை விற்றுவிட திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தாய் வினிஷா, மாமியார் சரளா மற்றும் தோழி சிவரஞ்சனி மூலம் குழந்தைக்கு வாங்குபவரை தேடியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக சுமதி என்ற பெண் ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்து, குழந்தையை திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த, குழந்தை இல்லாமல் 10 ஆண்டுகளாக தவித்த தம்பதியிடம் கடந்த ஜூலை மாதம் ஒப்படைத்துள்ளனர். இதற்காக தம்பதியினர் ரூ.2.20 லட்சம் பெற்றதாகவும், அதிலிருந்து இடைநிலையாளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வாரம் ஒருமுறை அந்த தம்பதி குழந்தையுடன் சென்னைக்கு வந்தபோது இந்த தகவல் குழந்தைகள் நல துறைக்கு தெரியவந்தது. குழந்தைகள் நல அலுவலர் புகாரின் பேரில் கண்ணகி நகர் போலீசார் ஸ்ரீஜி, வினிஷா, சரளா, சிவரஞ்சனி, சகாயமேரி, சுமதி ஆகியோரை கைது செய்தனர். விற்றுத் தந்த தம்பதியினரிடமிருந்த 6 மாத குழந்தை மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குழந்தை விற்பனை தொடர்பாக மேலும் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் கண்ணகி நகர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க