இன்று 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... கனமழை எச்சரிக்கை!
Dinamaalai November 06, 2025 12:48 PM

வட தமிழக உள் மாவட்டங்கள் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்வதால், இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகரித்து உள்ளது. இதையடுத்து, 9 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் அறிவித்துள்ளது.

அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நாளை ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, நவம்பர் 8ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் மழை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதே நேரத்தில், சென்னை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுமாம். சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடிமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வானிலை துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.