வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
WEBDUNIA TAMIL November 10, 2025 02:48 PM

பங்குச்சந்தை கடந்த வாரம் சரிவில் இருந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்த நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை ஏற்றம் கண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 200 புள்ளிகள் உயர்ந்து, 83,400 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 69 புள்ளிகள் உயர்ந்து, 25,560 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், டாக்டர் ரெட்டி, ஹெச்.சி.எல். டெக்னாலஜி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, இந்துஸ்தான் லீவர், இன்ஃபோசிஸ், ஐ.டி.சி., கோடக் மஹேந்திரா வங்கி, சன் பார்மா, டி.சி.எஸ்., டைட்டன், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.

அதேபோல், ஸ்டேட் வங்கி, பவர் கிரிட், மேக்ஸ் ஹெல்த், மஹேந்திரா அண்ட் மஹேந்திரா, இண்டிகோ, அப்பல்லோ ஹாஸ்பிடல் உள்ளிட்ட பங்குகளின் விலைகள் சரிந்து விற்பனை ஆகி வருகிறது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.