உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்கள் ஒரு நாளைக்கு 10.8 கிராம் உப்பை உட்கொள்கிறார்கள். இது இவர்களின் உடலின் தேவையை விட மிக அதிகமானது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இது நாளடைவில் பல ஆபத்தான நோய்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. இந்தியாவில் பெரும்பாலோனார் அதிக உப்பையும் குறைவான புரதத்தையும் (Protein) உட்கொள்கிறார்கள். உப்பில் உள்ள சோடியம் சமநிலையை சீர்குலைத்து, தசை வலி, பிடிப்புகள், மயக்கம், அமைதியின்மை, செரிமான பிரச்சினைகள் மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. மேலும் இரத்த அழுத்தம் (Blood Pressure) அதிகரிக்கிறது. உணவில் உப்பு அதிகமாக உட்கொண்டால், பல நோய்கள் நம் உடலில் நுழைகின்றன.
ALSO READ: உயர் இரத்த அழுத்தம் இருக்கா? இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!
அதிக உப்பு சாப்பிடுவதால் தலைவலி:அதிக உப்பு சாப்பிடுவது ஒற்றைத் தலைவலி ஏற்படுத்தும். பல நேரங்களில், இது கால்சியம் அளவு மோசமடைவதற்கு வழிவகுத்து ஹைப்பர் மற்றும் ஹைபோ-கலீமியாவுக்கு வழிவகுக்கிறது. நாளடைவில் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. WHO அறிக்கையின்படி, தினமும் 5 கிராம் உப்பு சாப்பிட அறிவுறுத்துகிறது. அதிகப்படியான உப்பு உங்கள் உடலுக்கு கடுமையான தீங்கு விளைவிக்கும்.
இதன் பொருள் ஒரு ஆரோக்கியமான நபர் ஒரு நாள் முழுவதும் ஒரு டீஸ்பூன் உப்பு மட்டுமே சாப்பிட வேண்டும். புரதம் ஒரு உடல் கட்டுமானப் பொருளாக கருதப்படுகிறது. பொதுவாக, ஒரு கிலோ எடைக்கு 1 கிராம் என்ற விகிதத்தில் புரதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இருப்பினும், இந்திய சமையலில், உப்பு இன்னும் மிதமாகப் பயன்படுத்தப்படுகிறது.
உயர் இரத்த அழுத்தம் மாரடைப்பு:தொடர்ந்து அதிகப்படியான உப்பு எடுத்துகொள்வது உயர் இரத்த அழுத்தம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்தான நிலைமைகளுக்கு வழிவகுக்கும். இந்த நோய் “அமைதியான கொலையாளி” என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் அதன் அறிகுறிகள் படிப்படியாகத் தோன்றும். உயர் இரத்த அழுத்தம் இதயத்தை கடினமாக உழைக்க கட்டாயப்படுத்துகிறது, இது இதய தசை பலவீனமடையும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. இது இதய செயலிழப்பு, கரோனரி தமனி நோய் மற்றும் மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைமைகளுக்கு வழிவகுக்கும்.
ALSO READ: யூரிக் ஆசிட் அதிகரிக்கிறதா..? உடலில் இந்த பிரச்சனைகள் தோன்றும்..!
உயர் இரத்த அழுத்தம் மூளைக்கு இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் அல்லது அழுத்தம் காரணமாக இரத்த நாளம் வெடிக்கும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. இந்த நிலை பக்கவாதம், பேசுவதில் அல்லது சிந்திக்க சிரமம் மற்றும் மரணத்திற்கு கூட வழிவகுக்கும்.