தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக இம்மழை அதிகரித்துள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வரும் 22ஆம் தேதிக்குள் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும், அது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் தாக்கமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!