||श्री:||
ஸ்ரீ ராமஜெயம்
பஞ்சாங்கம் | 19.11.2025 | புதன்கிழமை
!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
श्री:श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
கார்த்திகை ~ 03 { 19.11.2025 } புதன் கிழமை**
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம்
ருது ~ சரத் ருது.
மாதம் ~ கார்த்திகை மாதம் { விருச்சிக மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 10 24 am வரை சதுர்த்தசி பின் அமாவாஸ்யை
நாள் ~ புதன் கிழமை {சௌம்ய வாஸரம்}
நக்ஷத்திரம் ~ 9.19 am வரை ஸ்வாதி பின் விசாகம்
யோகம் ~ சௌபாக்யம்
கரணம் ~ சகுனி
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
நல்லநேரம் ~ காலை 9.00 ~ 10.00 & மாலை 2.00 ~ 3.00.
ராகுகாலம் ~ மதியம் 12.00 ~ 1.30.
எமகண்டம் ~ காலை 7.30 ~ 9.00.
குளிகை ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.00to 10.30am and 2.00to3.00pm
சூரியஉதயம் ~ காலை 6.13
சந்திராஷ்டமம் ~ மீனம்
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்
ஸ்ராத்ததிதி ~ அமாஸ்யை
இன்று ~ ஸர்வ அமாஸ்யை
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः।
सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஹோரை புதன்கிழமை
காலை
6-7.புதன். சுபம்
7-8.சந்திரன்.சுபம்
8-9. சனி.. அசுபம்
9-10.குரு. சுபம்
10-11. செவ்வா.அசுபம்
11-12. சூரியன்.அசுபம்
பிற்பகல்
12-1. சுக்கிரன்.சுபம்
1-2. புதன். சுபம்
2-3. சந்திரன்.சுபம்
மாலை
3-4. சனி..அசுபம்
4-5. குரு. சுபம்
5-6. செவ்வா.அசுபம்
6-7. சூரியன். அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
thiruvalluvar deivapulavar
இன்றைய (19-11-2025) ராசிபலன்கள்
மேஷம்மேஷ ராசிக்கான பலன்கள் –
நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடத்தில் ஆதரவுகள் மேம்படும். எதிர்பாராத சிலரின் அறிமுகங்கள் உண்டாகும். புதிய தொழில் நுட்பம் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரிய முயற்சிகள் கைகூடும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
அஸ்வினி : ஆதரவுகள் மேம்படும்.
பரணி : தேடல்கள் அதிகரிக்கும்.
கிருத்திகை : முயற்சிகள் கைகூடும்.
ரிஷப ராசிக்கான பலன்கள் –
உத்தியோகத்தில் நினைத்த பணிகளை முடிப்பீர்கள். தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். வியாபாரத்தில் இருந்த மந்த தன்மை விலகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
ரோகிணி : இடையூறுகள் விலகும்.
மிருகசீரிஷம் : மந்த தன்மை விலகும்.
மிதுன ராசிக்கான பலன்கள் –
அக்கம்பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் பெருகும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும். புதிய கனவுகள் பிறக்கும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : ஆதரவுகள் பெருகும்.
திருவாதிரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : கனவுகள் பிறக்கும்.
கடக ராசிக்கான பலன்கள் –
நினைத்த காரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உறவுகள் வழியில் அனுபவம் மேம்படும். கலைப் பொருள்களில் கவனம் வேண்டும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் அமையும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : ஆரோக்கியத்தில் கவனம்
பூசம் : குழப்பம் விலகும்.
ஆயில்யம் : ஆசிகள் கிடைக்கும்.
சிம்ம ராசிக்கான பலன்கள் –
குடும்பத்தில் ஆதரவுகள் மேம்படும். பூர்வீக பிரச்சனைகள் குறையும். வெளிவட்டத்தில் செல்வாக்கு உயரும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். அதிரடியான சில செயல்கள் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். உயர் அதிகாரிகள் இடத்தில் புரிதல் அதிகரிக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம்
மகம் : ஆதரவுகள் மேம்படும்.
பூரம் : மாற்றம் உருவாகும்.
உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
கன்னி ராசிக்கான பலன்கள் –
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தன வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். பழைய சிக்கல்கள் விலகும். வியாபார ரகசியங்களை புரிந்து கொள்வீர்கள். உணவு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அலுவலக பணிகளில் துரிதம் ஏற்படும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திரம் : நெருக்கடிகள் குறையும்.
அஸ்தம் : சிக்கல்கள் விலகும்.
சித்திரை : துரிதம் ஏற்படும்.
துலாம் ராசிக்கான பலன்கள் –
நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிக்கவும். திருமண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் நிலவும்.உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மறைமுக பிரச்சனைகள் குறையும். கூட்டாளிகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். தேர்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.
சுவாதி : மாற்றமான நாள்.
விசாகம் : புரிதல் அதிகரிக்கும்.
விருச்சிக ராசிக்கான பலன்கள் –
தொழில் செய்பவர்களுக்கு மாற்றமான சூழல் ஏற்படும். வர்த்தகத்தில் சிந்தித்து செய்லபடவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வெளிவட்டார நட்புகளால் புதிய அனுபவம் ஏற்படும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
விசாகம் : மாற்றமான நாள்.
அனுஷம் : அனுபவம் ஏற்படும்.
கேட்டை : பயணங்கள் உண்டாகும்.
தனுசு ராசிக்கான பலன்கள் –
தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். ஒப்பந்தங்களில் இருந்த தாமதங்கள் விலகும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்து செயல்படவும். உத்தியோகத்தில் நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : அறிமுகம் ஏற்படும்.
பூராடம் : விட்டுக்கொடுத்து செயல்படவும்.
உத்திராடம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
மகர ராசிக்கான பலன்கள் –
பணியிடத்தில் மதிப்புகள் மேம்படும். துணைவரிடத்தில் ஒத்துழைப்புகள் ஏற்படும். விவாசாயம் பணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும். பழைய அனுபவங்கள் பற்றிய சிந்தனைகள் உருவாகும். விவாத போக்குகளை தவிர்த்துக் கொள்ளவும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : ஒத்துழைப்புகள் ஏற்படும்.
திருவோணம் : அனுபவங்கள் கிடைக்கும்.
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
கும்ப ராசிக்கான பலன்கள் –
உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். கூட்டாளிகள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
சதயம் : விட்டுக் கொடுத்து செல்லவும்.
பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
மீன ராசிக்கான பலன்கள் –
எண்ணிய சில பணிகள் தடைப்பட்டு முடியும். எதிர்காலம் குறித்த சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். விமர்சன பேச்சுகள் தோன்றி மறையும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். உதவிகள் செய்வதில் கவனம் வேண்டும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். பலவினங்களை புரிந்து கொள்வீர்கள். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
பூரட்டாதி : குழப்பமான நாள்.
உத்திரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.
ரேவதி : புரிதல் உண்டாகும்.
thiruvalluvar
தினம் ஒரு திருக்குறள்
அதிகாரம்: அருளுடைமை குறள் எண்: 246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
மு.வ உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.
ராஜா பர்த்ரு ஹரியின் சுபாஷிதம்
மாதா சமம் நாஸ்தி சரீர போஷணம்
சிந்தா சமம் நாஸ்தி சரீர சோஷணம்
பார்யா சமம் நாஸ்தி சரீர தோஷணம்
வித்யா சமம் நாஸ்தி சரீர பூஷணம்
ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை
கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை.
மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை.
கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.
தினசரி. காம்
தினம் ஒரு திருமுறைமறை – 1. பதிகம் – 44 பாடல் – 7
பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.
விளக்கவுரை :
சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?
இன்றைய சிந்தனைக்கு…பயன்படுத்தாத திறமை, தன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும், உனக்குள் இருக்கும் திறமையை, பயன்படுத்து!
உன்னால் முடிந்ததை, சிறப்பாக செய்தால், அது திறமை, முடியாததை சிறப்பாக செய்தால், அதுவே தன்னம்பிக்கை!!
விழுந்த இலைகளுக்காக, எந்த மரமும், விழுந்து, விழுந்து அழுவதில்லை, புதிய தளிர்களை தந்து, மீண்டும், மீண்டும், தன்னம்பிக்கையோடு தலையாட்டும்!!!
பஞ்சாங்கம் – நவ.19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil