சொந்த மண்ணில் வரலாறு காணாத தோல்வி: 549 ரன்கள் இலக்கு… வெறும் 140 ரன்களுக்கு ஆல் அவுட்! 2-0 எனத் தொடரை இழந்த இந்தியா..!!!
SeithiSolai Tamil November 26, 2025 11:48 PM

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது மற்றும் கடைசிப் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது.

இதில் 549 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய இந்திய அணி, தொடக்கம் முதலே தடுமாறியது. அணியின் தொடக்க வீரர்களான துருவ் ஜய்ஸ்வால் (13) மற்றும் கே.எல். ராகுல் (6) ஆகியோர் வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. சொந்த மண்ணில் இந்திய அணி தொடர் தோல்விகளைச் சந்திப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.