IND vs SA: டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ரிஷப் பண்ட்!
TV9 Tamil News November 28, 2025 02:48 PM

2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (WTC 2025-27) இறுதிப்போட்டிக்கு முக்கியமான தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி (Indian Cricket Team) இழந்தது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பிறகு நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. தென்னாப்பிரிக்காவை தங்கள் சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கில் எளிதாக தோற்கடிக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறானது நடந்தது. தென்னாப்பிரிக்கா இந்திய அணி மற்றும் விளையாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றியது. இந்திய அணி இந்தியாவில் 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. அதாவது, முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்திலும்,  இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இதன் காரணமாக, இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே கோப அலை எழுந்துள்ளது. பேட்டிங்கிற்கு ஏற்ற பிட்ச் இருந்தபோது, ​​குவஹாத்தி டெஸ்டில் இந்தியா 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சுப்மன் கில் காயமடைந்த பிறகு, இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் பொறுப்பேற்றார். இந்த தோல்விக்குப் பிறகு, ரிஷப் பண்ட் மன்னிப்பு கேட்டுள்ளார்.

ALSO READ: WTC புள்ளிகள் பட்டியலில் சரிந்த இந்தியா.. பாகிஸ்தான் முன்னிலை.. யார் முதலிடம்?

மன்னிப்பு கேட்ட ரிஷப் பண்ட்:

🇮🇳 pic.twitter.com/a5QjzCtY2a

— Rishabh Pant (@RishabhPant17)


ரிஷப் பண்ட் இதுகுறித்து கூறுகையில், “கடந்த இரண்டு வாரங்களாக நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை என்பதை நாங்கள் மறக்க முடியாது. ஒரு அணியாகவும் தனிநபர்களாகவும், நாங்கள் எப்போதும் உயர்ந்த மட்டத்தில் செயல்பட்டு மில்லியன் கணக்கான இந்தியர்களின் முகங்களில் புன்னகையை வரவழைக்க விரும்புகிறோம். ஆனால், சாரி இந்த முறை எதிர்பார்ப்புகளை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை. விளையாட்டு ஒரு அணியாகவோ அல்லது ஒரு வீரராகவோ கற்றுக்கொள்ளவும் வளரவும் கற்றுக்கொடுக்கிறது. இந்திய அணிக்காக விளையாடுவது எங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய மரியாதை. இந்த அணியின் திறன் என்னவென்று எங்களுக்குத் தெரியும், நாங்கள் கடினமாக உழைப்போம், ஒன்றிணைந்து வலுவாக மீண்டு வருவோம். உங்கள் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் அன்புக்கு நன்றி. ஜெய் ஹிந்த்.” என்று தெரிவித்தார்.

ALSO READ: தென்னாப்பிரிக்கா தொடர் இழப்பு.. பிரஸ் மீட்டில் கவுதம் கம்பீர் காட்டம்!

பேட்டிங்கில் சொதப்பிய ரிஷப் பண்ட்:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் ரிஷப் பண்ட்டின் பேட்டிங் செயல்திறன் ஏமாற்றமளிக்கும் வகையில் இருந்தது. ரிஷப் பண்ட் 2 டெஸ்ட் போட்டிகளையும் சேர்த்து 49 ரன்கள் மட்டுமே எடுத்தார். குவஹாத்தி டெஸ்டில் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த விதம் பரவலாக விமர்சிக்கப்பட்டது. மேலும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரை ஒரு சில இந்திய ரசிகர்கள் மைதானத்திலேயே கிண்டல் செய்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.