சென்னை மாங்காடு அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில், இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது செல்போனில் ரீல்ஸ் வீடியோ எடுத்தபடி அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியதால் அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டு 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரைச் சேர்ந்த சசி மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் நேற்று வெளிவட்டச் சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தனர். மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் அருகே சென்றபோது, அவர்கள் தங்கள் செல்போனில் ரீல்ஸ் வீடியோ எடுத்தபடி சென்றுள்ளனர். அப்போது முன்னால் சென்ற பைக் மீது இவர்களது வாகனம் மோதியதில், மூன்று பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
அப்போது அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உதவி செய்வதற்காக விபத்து நடந்த இடத்திற்கு வந்துள்ளார். அதற்குள், அந்த வழியாக வந்த மற்றொரு பைக் இவர்கள் மீது மோதியதால், அடுத்தடுத்து நடந்த விபத்தில் மொத்தம் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்த ஐந்து பேரும் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், ரீல்ஸ் வீடியோ எடுத்தபடி வாகனத்தை ஓட்டிய இரண்டு பேருக்கு லேசான காயங்களும், மற்ற மூன்று பேருக்குப் பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளன. இவர்கள் மேல் சிகிச்சைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!