பஞ்சாங்கம் டிச.9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
Dhinasari Tamil December 09, 2025 11:48 PM

பஞ்சாங்கம் டிச.9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்! Dhinasari Tamil %name%

இன்றைய பஞ்சாங்கம் – டிச.9

ஸ்ரீராமஜயம் | ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம

!!ஸ்ரீ:!!

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

கார்த்திகை~ 24 (09. 12.2025) செவ்வாய் கிழமை.
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம்
ருது ~ சரத் ருது.
மாதம் ~ கார்த்திகை மாஸம் { விருச்சிக மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
*திதி ~ 8.47 pm வரை பஞ்சமி பின் ஷஷ்டி
நாள் ~ {பௌம வாஸரம்} செவ்வாய் கிழமை.
நட்சத்திரம்~ 9.01 am வரை பூசம் பின் ஆயில்யம்
யோகம் ~ மாஹேந்திரம்
கரணம் ~ கௌளவம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகு காலம் ~ மாலை 3.00 ~ 4.30.
எமகண்டம் ~ காலை 9.00 ~ 10.30.
நல்ல நேரம் ~ காலை 7.30 to 9.00 am and 4.30 to 5.30 pm
குளிகை ~ மதியம் 12.00 ~ 1.30.
சூரியஉதயம் ~ காலை 6.23
சந்திராஷ்டமம்~ தனுசு
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ பஞ்சமி
இன்று * ~

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

இன்றைய (9-12-2025) ராசி பலன்கள் மேஷம்

செயல்பாடுகளில் இருந்த தடைகள் குறையும். உறவுகளிடம் பொறுமை வேண்டும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் கிடைக்கும். எண்ணங்களில் இருந்த குழப்பங்கள் விலகும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அஸ்வினி : தடைகள் குறையும்.
பரணி : அனுகூலம் உண்டாகும்.
கிருத்திகை : குழப்பங்கள் விலகும்.

ரிஷபம்

விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோக உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் தென்படும். இல்லத்தில் சுபகாரியம் நடைபெறும். சகோதர வழியில் ஆதாயம் உண்டாகும். செலவிற்கேற்ற வரவுகள் உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

கிருத்திகை : வாய்ப்புகள் தென்படும்.
ரோகிணி : ஆதாயம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : செலவுகள் ஏற்படும்.

மிதுனம்

தடைப்பட்ட சில காரியங்கள் முடியும். உறவினர்கள் வழியில் மதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். எதிர்பார்த்து இருந்த உதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடத்தில் ஆதரவு ஏற்படும். மனதளவில் உற்சாகம் பிறக்கும். புதிய நட்புகள் மலரும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : மதிப்புகள் ஏற்படும்.
திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.
புனர்பூசம் : நட்புகள் மலரும்.

கடகம்

கடன் சார்ந்த உதவிகளில் அலைச்சல் ஏற்படும். செயல்களில் உள்ள மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அலுவல் பணிகளில் அலட்சியமின்றி செயல்படவும். மற்றவர்கள் பொருட்கள் மீது ஈர்ப்புகள் ஏற்படும். விமர்சன கருத்துக்களை தவிர்க்கவும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல் நிறம்

புனர்பூசம் : அலைச்சல் ஏற்படும்.
பூசம் : அலட்சியமின்றி செயல்படவும்.
ஆயில்யம் : கருத்துகளில் கவனம்.

சிம்மம்

நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். கடன் பிரச்சனைகள் குறையும். திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மற்றவர்கள் இடத்தில் சுமுகமாக பழகவும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். சக ஊழியர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மகம் : பிரச்சனைகள் குறையும்.
பூரம் : புரிதல் ஏற்படும்.
உத்திரம் : விட்டுக் கொடுத்து செல்லவும்.

கன்னி

சுப காரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். பயனற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபார அபிவிருத்திகன வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

உத்திரம் : முயற்சிகள் கைகூடும்.
அஸ்தம் : செலவுகளில் தவிர்க்கவும்.
சித்திரை : பாராட்டுக்கள் கிடைக்கும்.

துலாம்

சகோதரரால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். பாதியில் நின்ற பணியை செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தியை அளிக்கும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களின் சந்திப்புகள் ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

சித்திரை : பிரச்சனைகள் குறையும்.
சுவாதி : திருப்திகரமான நாள்.
விசாகம் : சந்திப்புகள் ஏற்படும்.

விருச்சிகம்

கணவன் மனைவி இடையே நெருக்கம் மேம்படும். புதிய நண்பர்களால் உற்சாகம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புக்கள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல்கள் உருவாகும். ஆராய்ச்சி பணிகளில் மேன்மை ஏற்படும். சிரமம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : நெருக்கம் மேம்படும்.
அனுஷம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
கேட்டை : மேன்மை ஏற்படும்.

தனுசு

மனதளவில் சில தடுமாற்றங்கள் ஏற்படும். பழைய உறவுகள் பற்றிய எண்ணங்கள் உருவாகும். புதிய முடிவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சில எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். நேர்மறை எண்ணங்களோடு எதிலும் செயலாற்றவும். வியாபாரத்தில் வளைந்து கொடுத்து செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : மாற்றங்கள் ஏற்படும்.
பூராடம் : முடிவுகளில் கவனம்.
உத்திராடம் : சூழ்நிலையறிந்து செயல்படவும்.

மகரம்

கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் புதிய அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். சுப காரியங்களில் இருந்து தடைகள் விலகும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
திருவோணம் : அறிமுகம் ஏற்படும்.
அவிட்டம் : தடைகள் விலகும்.

கும்பம்

எதிர்பார்த்த சில வரவுகள் உண்டாகும். உறவினர்களிடம் கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். பழைய பிரச்சனைகளில் இருந்த சிக்கல்கள் குறையும். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்

அவிட்டம் : வரவுகள் உண்டாகும்.
சதயம் : அனுகூலம் உண்டாகும்.
பூரட்டாதி : மதிப்புகள் கிடைக்கும்.

மீனம்

மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும். குழந்தைகளின் தனித்தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதியவர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் கவனத்துடன் செயல்படவும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். ஆசை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.
உத்திரட்டாதி : ஆதாயகரமான நாள்.
ரேவதி : ஆர்வம் ஏற்படும்.

thiruvalluvar deivapulavar தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: புலால் மறுத்தல் | குறள் 254:

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.

மு.வ உரை: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 1

44வது பதிக பாடல்கள் அனைத்தும் திருப்பாச்சிலாச்சிராமம் திருத்தலத்தில் பாடல் பெற்றவை ஆகும்

துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே .

விளக்கவுரை :

முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?

தினம் ஒரு பாசுரம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும்
முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும்,
எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும்
வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்,
தொழுகையும் இவை கண்ட அசோதை
தொல்லையின்பத்திறுதி கண்டாளே”

  • குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
    (கண்ணனது பால லீலைகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பல் – 715).

வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்…
தினசரி .காம்

சிந்தனைக்கு..

உன் மனம் தெளிவாக இருக்கும் வரை, உன்னை எவராலும் வீழ்த்த முடியாது; அடுத்த வாய்ப்பு என்று ஒன்று இருக்கும் வரை, எதற்கும் அஞ்சாதே!

உன்னால் நேற்றை சரி செய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்; கோபம் ஒரு நிமிட ஆவேசம், ஆனால் அதன் விளைவுகள், வாழ்நாள் பாடம்!!

ஏமாற்றங்கள் பழகிப் போகிறதே தவிர, எதுவும் மறந்து போவதில்லை; கழன்று விழும் வரை, சிலரது முகமூடிகளையும், முகம் என, நீ நம்பி கொண்டிருக்கிறாய்!!!

பஞ்சாங்கம் டிச.9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.