யம்மா, தப்பா சொல்றதை தைரியமா சொல்ற…. ஏன் தற்குறின்னு இப்ப தெரியுதா….? தமிழக வெற்றி கழகத்தை கலங்கச் செய்த பெண் தொண்டர்….!!
SeithiSolai Tamil December 20, 2025 10:48 AM

தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த பெண் ஒருவர் அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகி வருகிறது. அந்தப் பெண் பேட்டியின் போது, “சில தற்குறிங்க ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொன்னால் அதற்கு அப்புறம் என்ன என்று கேட்கிறார்கள்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சமம் என்று கூடவா தெரியாது?” என மிகத் தைரியமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய்யின் கொள்கை வாசகமான அந்தத் திருக்குறளின் முதல் அடியை மட்டும் வைத்துக்கொண்டு, மற்றவர்களைத் தற்குறி என அவர் விமர்சித்ததுதான் இப்போது விவாதமாகியுள்ளது. உண்மையில், அந்தத் திருக்குறள் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என்பதாகும். பிறப்பால் அனைவரும் சமம் என்றாலும், அவர்கள் செய்யும் செயல்களால் மட்டுமே சிறப்பு மாறுபடும் என்பதே அதன் பொருள்.

View this post on Instagram

A post shared by தகவல் தொழில்நுட்பப் பாசறை – நாம் தமிழர் கட்சி (@ntk_family_tn)