“யானை வரும்னு தெரியல” ஒரு நொடியில 8 உயிர் போயிருச்சு…. கடன் புறந்த ரயில் பெட்டிகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!
SeithiSolai Tamil December 21, 2025 10:48 AM

அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த ரயில் விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாய்ரங்கில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானைக் கூட்டத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த கோர விபத்தில் 8 யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. படுகாயமடைந்த ஒரு குட்டி யானையை மீட்ட வனத்துறையினர், அதற்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

யானைகள் நடமாடும் பகுதியாக இது அறிவிக்கப்படாததால், ஓட்டுநரால் ரயிலை உரிய நேரத்தில் கட்டுப்படுத்த முடியாமல் போனது பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தின் தாக்கத்தால் ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தை விட்டுத் தடம் புரண்டன. எனினும், ரயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தண்டவாளத்தில் யானைகளின் உடல் பாகங்கள் சிதறிக் கிடந்ததாலும், பெட்டிகள் தடம் புரண்டதாலும் வடகிழக்கு மாநிலங்களுக்கான ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ரயில்வே அதிகாரிகளும் போலீசாரும் இணைந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், விபத்து குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.