ஆடிப்போன அரசியல் களம்!எடப்பாடி கோட்டையில் தளபதி ஆட்டம்! – அதிர்ச்சியில் அதிமுக…!!!
SeithiSolai Tamil December 21, 2025 02:48 PM

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சமீபகாலமாகத் தனது அரசியல் செயல்பாடுகளில் மிகுந்த வேகம் காட்டி வருகிறார். குறிப்பாக ஈரோடு பொதுக்கூட்டத்திற்குப் பிறகு, அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரைத் தமிழ்நாட்டின் பொதுச் சொத்து எனக் குறிப்பிட்டுப் பேசியது, அவர் அதிமுகவின் அரசியல் தளத்தைக் குறிவைக்கிறாரோ என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் முக்கியத் தலைவரான செங்கோட்டையன் போன்றவர்கள் தவெகவில் இணைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி விஜய் பேசியிருப்பது, அக்கட்சியில் சேரத் தயக்கத்திலிருந்த மாற்றுக்கட்சிப் பிரமுகர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இதன் மூலம் வரும் தேர்தல்களில் தவெக ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சேலத்தில் வரும் 30-ஆம் தேதி விஜய் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் வலுவான பிடியில் இருக்கும் சேலத்தில், விஜய் எத்தகைய உரையை நிகழ்த்தப்போகிறார் என்பதும், அது அதிமுக வாக்குகளைப் பாதிக்குமா என்பதும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

அதிமுகவைப் பலவீனமாகக் காட்டும் விஜய்யின் அணுகுமுறை இரு தரப்பினரிடையே அரசியல் மோதல்களை உருவாக்கலாம் என்று நிபுணர்கள் கருதினாலும், விஜய்யின் இந்தப் புதிய பாய்ச்சல் அவரது கட்சியினரிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.