தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
கர்நாடக மாநிலம் மங்களூரு ஜங்சனில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 30-ந்தேதி காலை 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06126), அதேநாள் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்டிரல் சென்றடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் காலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06125), அதேநாள் இரவு 11.30 மணிக்கு மங்களூரு ஜங்சன் சென்றடையும்.
ஈரோட்டில் இருந்து நாளை மற்றும் 30-ந்தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06025), மறுநாள் மதியம் 1.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து வருகிற 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும் சிறப்பு ரெயில் (06026), மறுநாள் இரவு 8.30 மணிக்கு ஈரோடு சென்றடையும்.
அதேபோல, தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து நாளை இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி செல்லும் சிறப்பு ரெயில் (07407), மறுநாள் மாலை 5.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமார்க்கமாக, வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 25-ந்தேதி காலை 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07408), மறுநாள் காலை 6.10 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.
மேலும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து வருகிற 25-ந்தேதி மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06573) மறுநாள் காலை 6.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து 26-ந்தேதி காலை 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06574) மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.