“நீதி கிடைத்தது” பெற்ற மகளுக்கு செய்த கொடூரம்…. 47 வயதுத் தந்தைக்குத் தூக்குத் தண்டனை – தமிழகம் எதிர்பார்த்த தீர்ப்பு….!!
SeithiSolai Tamil December 24, 2025 11:48 PM

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், சமூகத்தையே உறைய வைத்துள்ளது. தனது 14 வயது மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்த 47 வயதுத் தந்தையின் செயலால், அந்தச் சிறுமி 7 மாதக் கர்ப்பமானார். மகளுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய தந்தையே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்தக் கொடுஞ்செயல் குறித்துப் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கு, நெல்லை மாவட்டப் போக்சோ நீதிமன்றத்தில் இன்று (டிசம்பர் 24) இறுதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பெற்ற மகளையே வன்கொடுமை செய்த தந்தையின் செயல் மன்னிக்க முடியாத குற்றம் எனக் குறிப்பிட்டு, அவருக்கு தூக்கு தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்தார். இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பாடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழ்நாடு அரசு திறமைக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.