நடுரோட்டில் போதையில் ஆட்டோ ஓட்டி அட்டகாசம் செய்த டிரைவர்… சாலைகளில் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே?… வைரலாகும் வீடியோவால் மக்கள் கொந்தளிப்பு…!!!
SeithiSolai Tamil December 28, 2025 11:48 PM

மும்பையின் அந்தேரி மார்க்கெட் பகுதியில் போதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் மிகவும் அபாயகரமாக ஆட்டோவை ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் ஆட்டோவை தாறுமாறாக ஓட்டிய அந்த நபர், சாலையில் சென்ற பாதசாரிகளையும் பெண்களையும் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த அதிர்ச்சிகரமான காட்சிகளைப் பின்னால் வந்த வாகன ஓட்டி ஒருவர் தனது அலைபேசியில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஆட்டோ ஓட்டுநர் வேண்டுமென்றே பாதையை மாற்றி மாற்றி ஓட்டுவதும், திடீரென வேகத்தைக் குறைப்பதும் தெளிவாகத் தெரிவதுடன், அவர் மது போதையில் இருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

View this post on Instagram