“பயப்பட மாட்டேன்.. துணிந்து நிற்பேன்..!” சைபர் குற்றவாளிகளுக்கு இந்திய வம்சாவளி இளைஞரின் மாஸ் பதிலடி… சர்வதேச அளவில் கிளம்பிய பரபரப்பு…!!!
SeithiSolai Tamil December 30, 2025 06:48 PM

‘ஹெலன்’ என்ற செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்தி வரும் இந்திய வம்சாவளித் தொழில்நுட்ப வல்லுநர் ராகவ் குப்தாவுக்கு, அடையாளம் தெரியாத நபர்கள் சுமார் 3 மில்லியன் டாலர் (சுமார் ரூ.25 கோடி) கேட்டு மிரட்டல் விடுத்துள்ளது சர்வதேச தொழில்நுட்பத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிறுவனத்தின் ரகசிய குறியீடுகள் மற்றும் வாடிக்கையாளர்களின் முக்கியமான தரவுகளைத் திருடிவிட்டதாகக் கூறும் மர்ம நபர்கள், கேட்கும் தொகையை வழங்காவிட்டால் அந்தத் தகவல்களை இணையத்தில் கசியவிட்டு நிறுவனத்தின் நற்பெயரைக் குலைப்போம் என எச்சரித்துள்ளனர்.

இது ஒரு சாதாரணப் பணப் பறிப்பு முயற்சியாக மட்டுமின்றி, வளர்ந்து வரும் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை முடக்கும் திட்டமிட்ட சதியாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த மிரட்டல் குறித்து ராகவ் குப்தா வெளியிட்டுள்ள பதிவில், சைபர் குற்றவாளிகளின் அச்சுறுத்தல்களுக்குத் தாம் பணியப் போவதில்லை என்றும், தரவுகளை மீட்டெடுக்கவும் குற்றவாளிகளைக் கண்டறியவும் சர்வதேச சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் உதவியை நாடியுள்ளதாகவும் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

மின்னஞ்சல் அல்லது தரவுச் சேமிப்புத் தளங்களில் உள்ள பாதுகாப்பு ஓட்டைகளைப் பயன்படுத்தி இந்த ஊடுருவல் நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம், வேகமாக வளர்ந்து வரும் ஏஐ நிறுவனங்களின் தரவுப் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ள நிலையில், ராகவ் குப்தாவின் துணிச்சலான சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்குப் பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.