பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "திருத்தணியில் வேலை பார்த்து வந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் சுராஜ், கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பலால் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' (Reels) எடுப்பதற்காகத் தனது கழுத்தில் கத்தியை வைத்ததை அவர் துணிச்சலுடன் தடுத்ததே அவர் செய்த ஒரே குற்றம்.
இதுதான் இன்றைய திமுக ஆட்சி நடக்கும் தமிழகத்தின் கவலையளிக்கும் எதார்த்த நிலை. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் போலீசார் கைது செய்திருந்தாலும், இதற்குப் பின்னால் உள்ள ஆழமான சீர்கேடுகள் இன்னும் களையப்படவில்லை.
போதைப்பொருட்கள் மிக எளிதாகக் கிடைப்பது, வன்முறையைப் பகிரங்கமாகப் போற்றுவது, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான அரசியல் பிரச்சாரங்கள் மற்றும் அரிவாள் போன்ற பயங்கரமான ஆயுதங்களைச் சாதாரணமாகக் கையில் எடுத்துச் செல்வது போன்றவை இந்த ஆட்சியில் இயல்பான ஒன்றாக மாறிவிட்டன.
ஒரு காலத்தில் அமைதியான மாநிலமாக இருந்த தமிழகத்தை, 'காட்டு தர்பார்' (Jungle Raj) ஆக மாற்றியதற்குத் திமுக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்."