ஊட்டியில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்.. படகு சவாரி, பூங்காக்களில் குவியும் மக்கள் - கடும் வாகன நெரிசல்!
Dinamaalai January 18, 2026 03:48 PM

பொங்கல் விடுமுறையைச் சிறப்பாகக் கழிக்கத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வருகை தந்துள்ளனர். கடந்த மூன்று நாட்களாகவே சுற்றுலாத் தலங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது.

இங்குள்ள பரந்து விரிந்த புல்வெளிகளில் சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து பொழுதை கழித்தனர். கண்ணாடி மாளிகையில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களையும், இத்தாலியன் பூங்காவையும் மக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.

இதமான காலநிலை நிலவுவதால், ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யச் சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும், ஏரிக்கரையில் குதிரை சவாரி மற்றும் குழந்தைகளுக்கான ரயிலில் சிறுவர்கள் உற்சாகமாகப் பயணம் செய்தனர்.

பைக்காரா படகு இல்லம், ரோஜா பூங்கா, சூட்டிங் மட்டம், பைன் ஃபாரஸ்ட் மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்கா ஆகிய இடங்களிலும் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் ஒரே நேரத்தில் ஊட்டிக்குள் நுழைந்ததால், பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஊட்டி - மேட்டுப்பாளையம் சாலை மற்றும் ஊட்டி - கூடலூர் சாலைகளில் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. முக்கியச் சந்திப்புகளில் போக்குவரத்தைச் சீர் செய்யக் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.