“தமிழக பயணிகளுக்கு ரயில்வேயின் மெகா கிஃப்ட்!”… அமைச்சர் எல். முருகன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!!
SeithiSolai Tamil March 07, 2026 05:48 AM

தமிழக ரயில்வே பயணிகளுக்குப் பெரும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில், விரைவில் 4 புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் ரயில்வே அமைச்சரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கைகளை ஏற்று இந்த புதிய ரயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக, தென் மாவட்ட மக்களின் வசதிக்காகச் சென்னை மற்றும் கோவை நகரங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

ஏற்கனவே வந்தே பாரத் ரயில்கள் மூலம் தமிழகத்தில் ரயில்வே சேவை நவீனமடைந்து வரும் நிலையில், இந்த 4 புதிய ரயில்களின் அறிவிப்பு பயணிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதற்கான கால அட்டவணை மற்றும் தொடக்க விழா குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.