'துரந்தர் 2' படத்தில் குர்பானியை அவமத்தித்துள்ளதாக வெடித்த சர்ச்சை; வீடியோ வெளியிட்டு விளக்கமளித்த மாதவன்..!
Seithipunal Tamil March 26, 2026 03:48 AM

ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கி உருவான படம் 'துரந்தர்' . இதில் அக்‌ஷய் கண்ணா, சஞ்சய் தத், அர்ஜூன் ராம்பால், மாதவன், சாரா அர்ஜூன் எனப் பலரும் இதில் நடித்திருந்தனர். ஸ்பை த்ரில்லர் படமாக உருவான இப்படம் உலகளவில், ரூ.1300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகமான 'துரந்தர் தி ரிவென்ஞ்; கடந்த மார்ச் 19 வெளியாகி வசூல் சாதனையை செய்து வருகிறது.

இந்த படத்தில் மாதவன் மற்றும் ரன்வீர் சிங் நடித்த ஒரு குறிப்பிட்ட காட்சியில், சீக்கிய மதத்தவரின் பத்து குருக்களில் பத்தாவது குருவும் அவர்களது இறுதி மனித குருவுமான குரு கோவிந்த் சிங் எழுதிய தசம் கிரந்தத்தின் வரிகளை மாதவன் சொல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

இது அந்த சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், எனவே இந்தக் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவசேனா (ஷிண்டே பிரிவு) தலைவரும், 'மகாராஷ்டிராவில் உள்ள சீக்கியர்கள்' குழுவின் தலைவருமான குர்ஜோத் சிங் கீர், மும்பையின் முலுண்ட் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Sikhs in Maharashtra (@sikhsinmaharashtra13)