"ஈரான் ஆட்டத்தை அடக்குவோம்!"... ட்ரம்ப் சபதம்... வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம்!
Dinamaalai March 26, 2026 02:48 PM


மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஈரானின் அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், "ஈரான் நீண்டகாலமாக உலக நாடுகளுக்கும், குறிப்பாக அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அவர்களின் அணு ஆயுதக் கனவு ஒருபோதும் நனவாகாது. ஈரானின் ஆட்டத்தை அடக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா எடுக்கும்" என ஆவேசமாகத் தெரிவித்தார்.

View this post on Instagram

A post shared by PhilSTAR L!fe (@philstarlife)