அதிமுக கோட்டையை ஆட்டிய சுதீஷ்… “தேமுதிக இல்லையென்றால் அதிமுக ஆட்சியே கிடையாது”… அரசியலில் வெடித்த புதிய சர்ச்சை…!!!
SeithiSolai Tamil March 26, 2026 06:48 PM

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் ஆற்றிய தேர்தல் பரப்புரையின் போது, திமுக கூட்டணியில் உள்ள தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை மறைமுகமாக விமர்சித்துப் பேசினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் அதில், கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தினாலேயே அதிமுக ஆட்சியைப் பிடிக்க முடிந்தது என்றும், தேமுதிகவின் ஆதரவு இல்லாமல் அதிமுக அப்போதே வெற்றி பெற்றிருக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தேமுதிகவை விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமி, 2011-ல் எங்கு இருந்தார் என்பது அவருக்கும் தெரியும், தங்களுக்கும் தெரியும் என்று சுதீஷ் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், தங்களுக்குத் தேவையான தொகுதிகளில் 70 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.