ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று முன்னதாக சபதம் செய்திருந்த டொனால்ட் ட்ரம்ப், தற்போது தனது நிலையில் இருந்து பின்வாங்கி ஆச்சரியமான மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, உலக வர்த்தகத்தின் முக்கிய பாதையான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ விவகாரத்தில் தனது கடுமையான போக்கை அவர் தளர்த்தியிருப்பது சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதே தனது நோக்கம் என்று கூறி வரும் ட்ரம்ப், ஈரானுடன் நேரடி மோதுவதை விட, இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மற்றும் பொருளாதார அழுத்தங்கள் மூலம் தீர்வு காண விரும்புவதாகத் தெரிகிறது. ட்ரம்ப்பின் இந்த புதிய திட்டத்தின் பின்னணியில் அமெரிக்காவின் பொருளாதார நலன்கள் மற்றும் உலகளாவிய எண்ணெய் விநியோகப் பாதுகாப்பு ஆகியவை முக்கியக் காரணிகளாகப் பார்க்கப்படுகின்றன.
இதனால் ஹார்முஸ் பகுதியில் பதற்றம் அதிகரித்தால் அது சர்வதேச கச்சா எண்ணெய் விலையை விண்ணைத் தொடச் செய்யும் என்பதால், போரைத் தவிர்த்து அமைதியான முறையில் ஈரான் பிரச்சினையை கையாள அவர் திட்டமிட்டுள்ளார். “யுத்தத்தின் முடிவு” என்ற கோஷத்துடன் களமிறங்கியுள்ள அவர், மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு நீண்டகாலப் போரில் அமெரிக்காவை ஈடுபடுத்த விரும்பவில்லை என்பதையே இந்த ‘யு-டர்ன்’ உணர்த்துகிறது.