|श्री:| |ஸ்ரீ:|
ஸ்ரீராமஜயம்
श्री:श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம் | 1.4.2026 | புதன்கிழமை
பங்குனி ~ 18 { 1.4.2026 } புதன் கிழமை
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம் ~ பங்குனி மாதம் {மீன மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 7.36 am வரை சதுர்தசி பின் பௌர்ணமி
நாள்~ புதன் கிழமை {சௌம்ய வாஸரம்}
நக்ஷத்திரம் ~ 4.38pm வரை உத்ரம் பின் ஹஸ்தம்
யோகம் ~ விருத்தி
கரணம் ~ வணிஜை
அமிர்தாதியோகம் ~ அசுபயோகம் / சுபயோகம்
நல்லநேரம் ~ காலை 9.00 ~ 10.00 & மாலை 2.00 ~ 3.00.
ராகுகாலம் ~ மதியம் 12.00 ~ 1.30.
எமகண்டம் ~ காலை 7.30 ~ 9.00.
குளிகை ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.00to 10.30 am and 2.00 to 3.00 pm
சூரியஉதயம் ~ காலை 6.15
சந்திராஷ்டமம் ~ கும்பம்
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்
ஸ்ராத்ததிதி ~ பௌர்ணமி
இன்று ~ பங்குனி உத்ரம் / பௌர்ணமி
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः।
सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஹோரை புதன்கிழமை
காலை
6-7.புதன். சுபம்
7-8.சந்திரன்.சுபம்
8-9. சனி.. அசுபம்
9-10.குரு. சுபம்
10-11. செவ்வா.அசுபம்
11-12. சூரியன்.அசுபம்
பிற்பகல்
12-1. சுக்கிரன்.சுபம்
1-2. புதன். சுபம்
2-3. சந்திரன்.சுபம்
மாலை
3-4. சனி..அசுபம்
4-5. குரு. சுபம்
5-6. செவ்வா.அசுபம்
6-7. சூரியன். அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
thiruvalluvar deivapulavar
இன்றைய (1-4-2026) ராசிபலன்கள்
மேஷம்தந்திரமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களால் லாபம் ஏற்படும். திடீர் வாய்ப்புகள் மூலம் மாற்றம் உண்டாகும். எதிர்ப்புக்களின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படவும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : காரிய சித்தி உண்டாகும்.
பரணி : ஆதாயகரமான நாள்.
கிருத்திகை : விழிப்புணர்வு வேண்டும்.
பழைய சொத்துக்களை மாற்றி அமைப்பீர்கள். நிர்வாக துறைகளில் மதிப்புகள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். இலக்கியப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். புது விதமான எண்ணங்கள் பிறக்கும். சக ஊழியர்கள் இடத்தில் நிதானம் வேண்டும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
கிருத்திகை : திறமை கூடும்.
ரோகிணி : பிரார்த்தனை நிறைவேறும்.
மிருகசீரிஷம் : அமைதி காக்கவும்.
எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். பயணம் மூலம் அனுபவம் மேம்படும். நெருக்கமானவர்களின் சந்திப்புகள் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சக ஊழியர்கள் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் அமையும். எதிர்பார்த்த சில பணிகள் நிறைவு பெறும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : அனுபவம் மேம்படும்.
திருவாதிரை : தெளிவுகள் பிறக்கும்.
புனர்பூசம் : அனுகூலமான நாள்.
சிறு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த சில முடிவுகள் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : லாபகரமான நாள்.
பூசம் : முடிவுகள் கிடைக்கும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.
எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். முகத்தில் பொலிவுகள் மேம்படும். வரவேண்டிய வரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். தாமதம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
மகம் : உதவிகள் கிடைக்கும்.
பூரம் : பொலிவுகள் மேம்படும்.
உத்திரம் : ஒத்துழைப்புகள் அதிகரிக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. விதண்டாவாத சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். திடீர் பயணம் மூலம் அலைச்சல் ஏற்படும். புதுமையான செயல்களில் ஆர்வம் ஏற்படும். மற்றவர்கள் மீதான கருத்துக்களில் கவனம் வேண்டும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
உத்திரம் : ஆரோக்கியத்தில் கவனம்
அஸ்தம் : வாய்ப்புகள் உண்டாகும்.
சித்திரை : கவனம் வேண்டும்.
செய்யும் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். கை கால்களில் ஒரு விதமான வலிகள் ஏற்பட்டு நீங்கும். பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். மனதிற்கு பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
சித்திரை : பதற்றமின்றி செயல்படவும்.
சுவாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
விசாகம் : புரிதல்கள் ஏற்படும்.
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் லாபகரமான சூழல்கள் அமையும். வழக்கு விஷயங்களில் சாதகமான சூழல் அமையும். நெருக்கமானவர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். மதிப்புகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : சிந்தனைகள் மேம்படும்
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : உடைமைகளில் கவனம்
கமிஷன் தொடர்பான பணிகளில் லாபங்கள் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். வாகன தொடர்பான விரயங்கள் ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். உறவினர்கள் வகையில் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
மூலம் : லாபங்கள் உண்டாகும்.
பூராடம் : விரயங்கள் ஏற்படும்.
உத்திராடம் : அனுகூலமான நாள்.
துணைவர் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும். ஆராய்ச்சி சிந்தனைகள் மற்றும் அதற்கான உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் பணிகளில் மாற்றமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை காணப்படும். புது விதமான சிந்தனைகள் மூலம் புத்துணர்ச்சியான தருணங்கள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மேன்மை உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்பு நிறம்
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : மாற்றமான நாள்.
அவிட்டம் : மேன்மை உண்டாகும்.
மாணவர்கள் பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நல்லது. எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல்கள் உண்டாகும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். ஆராய்ச்சி சம்பந்தமான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
அவிட்டம் : உடைமைகளில் கவனம்
சதயம் : புரிதல்கள் உண்டாகும்.
பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
அலுவல் பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். முயற்சி ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
ரேவதி : மாற்றம் உண்டாகும்.
thiruvalluvar
தினம் ஒரு திருக்குறள்
அதிகாரம்: அருளுடைமை குறள் எண்: 246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
மு.வ உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.
ராஜா பர்த்ரு ஹரியின் சுபாஷிதம்
மாதா சமம் நாஸ்தி சரீர போஷணம்
சிந்தா சமம் நாஸ்தி சரீர சோஷணம்
பார்யா சமம் நாஸ்தி சரீர தோஷணம்
வித்யா சமம் நாஸ்தி சரீர பூஷணம்
ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை
கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை.
மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை.
கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.
தினசரி. காம்
தினம் ஒரு திருமுறைமறை – 1. பதிகம் – 44 பாடல் – 7
பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.
விளக்கவுரை :
சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?
இன்றைய சிந்தனைக்கு…பயன்படுத்தாத திறமை, தன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும், உனக்குள் இருக்கும் திறமையை, பயன்படுத்து!
உன்னால் முடிந்ததை, சிறப்பாக செய்தால், அது திறமை, முடியாததை சிறப்பாக செய்தால், அதுவே தன்னம்பிக்கை!!
விழுந்த இலைகளுக்காக, எந்த மரமும், விழுந்து, விழுந்து அழுவதில்லை, புதிய தளிர்களை தந்து, மீண்டும், மீண்டும், தன்னம்பிக்கையோடு தலையாட்டும்!!!
பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil