அசைவப் பிரியர்களுக்கு இதுதான் 'பூலோக சொர்க்கம்'.. காய்கறிகளே இல்லாத விசித்திர நாடு.. ஒரு கிலோ மட்டன் விலை எவ்வளவு கம்மியா? இது எங்க இருக்கு தெரியுமா?
SeithiSolai Tamil April 02, 2026 11:48 AM

மட்டன் பிரியர்களுக்கு மங்கோலியா ஒரு நிஜமான சொர்க்கம் என்று சொல்லலாம். இந்தியாவில் ஒரு கிலோ ஆட்டிறைச்சி 600 முதல் 700 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில், மங்கோலியாவில் ஒரு கப் தேநீரின் விலையை விட ஒரு கிலோ இறைச்சியின் விலை மிகவும் மலிவாக உள்ளது.

அங்கு சுமார் 35 லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கின்றனர், ஆனால் கால்நடைகளின் எண்ணிக்கையோ 7 கோடிக்கும் அதிகமாக உள்ளது. அதாவது, அங்கு ஒரு நபருக்கு சராசரியாக 20 விலங்குகள் உள்ளன. பரந்த புல்வெளிகளில் இவை தானாகவே மேய்வதால், வளர்ப்புச் செலவு குறைவு என்பதால் இறைச்சி மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது.

மங்கோலியர்களின் உணவுப் பழக்கத்தில் காய்கறிகள், அரிசி அல்லது பருப்பு வகைகளுக்கு இடமே இல்லை. அவர்கள் உணவை ‘சிவப்பு உணவு’ (இறைச்சி) மற்றும் ‘வெள்ளை உணவு’ (பால் பொருட்கள்) என இரண்டாகப் பிரிக்கிறார்கள். குறிப்பாகக் கடும் குளிர் காலங்களில், தங்களுக்குத் தேவையான சத்துக்களைப் பெற அவர்கள் முழுவதுமாக அசைவ உணவுகளையே நம்பியிருக்கிறார்கள்.

ஆடுகள், மாடுகள் மற்றும் ஒட்டகங்கள் அதிக அளவில் இருப்பதால், அங்கு அசைவ உணவு என்பது ஒரு சாமானிய மனிதனும் எளிதில் வாங்கி உண்ணக்கூடிய அன்றாட உணவாகவே இருக்கிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.