தெலுங்கானா மாநிலத்தின் மூசி நதி புனரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, அனந்தகிரி மலையில் பிரம்மாண்டமான கோயில் ஒன்றை எழுப்ப முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி திட்டமிட்டுள்ளார்.
ஹைதராபாத்திற்கு மேற்கே 90 கி.மீ தொலைவில் உள்ள இந்த அனந்தகிரி மலைதான் மூசி நதி உற்பத்தியாகும் இடமாகும். யாதகிரிகுட்டா லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு இணையாக, இந்தியாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் இந்த ஆன்மீகத் தலம் அமையும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரேவந்த் ரெட்டி, "நான் தீவிரமாக இந்து மதத்தை பின்பற்றுபவன், கர்ம வினை கோட்பாட்டின் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு" என்று வெளிப்படையாக தனது நம்பிக்கையை பகிர்ந்து கொண்டார்.
இந்தத் திட்டம் வெறும் நதி மீட்பு மட்டுமல்லாமல், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு முக்கிய இயந்திரமாகவும் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ் இத்திட்டம் குறித்து பொய் பிரச்சாரங்களை செய்வதாக குற்றம் சாட்டிய அவர், அரசு மக்களின் பாதுகாவலனாகவே செயல்படும் என்றும், யாருடைய சொத்துக்களையும் வலுக்கட்டாயமாக பறிக்காது என்றும் உறுதி அளித்தார்.
Edited by Siva