தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. வேட்புமனுத் தாக்கல் நேற்றோடு முடிவடைந்த நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தற்போது நடைபெற்று வருகிறது.
அனைத்து கட்சியில் இருந்தும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலினின் வேட்புமனு ஏற்கப்பட்டிருக்கிறது. கொளத்தூரில் போட்டியிடும் முதல்வர் ஸ்டாலினின் வேட்புமனு ஏற்கப்பட்டிருக்கிறது.
உதயநிதி, ஸ்டாலின்
அதேபோல பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். தற்போது பெரம்பூர் தொகுதியில் அவர் கொடுத்த வேட்புமனு ஏற்கப்பட்டிருக்கிறது.
ஆனால் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த தவெக-வைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
'திருநெல்வேலி செல்லும் விஜய்; வருத்தத்தில் கட்சி நிர்வாகிகள்!' - காரணம் என்ன?