விஜய் நடிப்பில் அவரது இறுதி படமாக வெளிவர உள்ளது ஜனநாயகன். ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் தயாராகி பல மாதங்கள் ஆகியும் படம் வெளியாவதில் இழுப்பறி நீடிக்கிறது. இதுவரை படத்திற்கு தணிக்கை சான்று கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் படம் வெளியிடும் தேதி இதுவரை முடிவு செய்யப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று சமூக வலைதளங்களில் ஜன நாயகன் படத்தின் காட்சிகள் லீக் ஆகின. இதனால் படக்குழு மட்டுமின்றி ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக படக்குழு இது குறித்து புகார் அளித்துள்ளனர். இது திரையுலகினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஜன நாயகன் விவகரத்தில் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒவ்வொரு படமும் நூற்றுக்கணக்கான மனிதர்களின் ரத்தத்திலும் வியர்வையிலும் உருவாகிறது. தியேட்டரில் வரும் வரை தயவுசெய்து தவறான வழியில் படம் பார்ப்பதை தவிருங்கள். இதனை வெளியிட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திறமையையும் கடின உழைப்பையும் மதியுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.