“ஒரு நிமிஷம் கூட யோசிக்கல” மரணப்பிடியில் சிக்கிய பெண்ணை மீட்ட தொழிலாளிகள்…. சிசிடிவியில் சிக்கிய மனிதாபிமானம்….!!
SeithiSolai Tamil April 11, 2026 08:48 AM

மும்பையில் உள்ள ஒரு கிடங்கில் (Warehouse) வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி மீது எதிர்பாராத விதமாக ராட்சத தானிய மூட்டைகள் சரிந்து விழுந்தன. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், அந்தப் பெண் மூட்டைகளுக்கு அடியில் சிக்கி முழுமையாகப் புதைந்து போனார். உயிருக்குப் போராடிய அந்தப் பெண்ணைப் பார்த்த அங்கிருந்த சக தொழிலாளர்கள், அடுத்த நொடியே யோசிக்காமல் களத்தில் குதித்தனர்.

கடுமையான எடையுள்ள அந்த மூட்டைகளை மின்னல் வேகத்தில் அகற்றி, அந்தப் பெண்ணை உயிருடன் மீட்டனர். சிசிடிவி கேமராவில் பதிவான இந்தக் காட்சி, நிஜமான ஹீரோக்கள் என்பவர்கள் ஆடம்பரமான உடையில் வருபவர்கள் அல்ல, இக்கட்டான நேரத்தில் மனிதாபிமானத்துடன் கரம் கொடுப்பவர்களே என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. எவ்விதப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய அந்தத் தொழிலாளர்களின் செயல் தற்போது இணையத்தில் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.