பரபரப்பு சம்பவம்! லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட வி.ஏ.ஓ...!
Seithipunal Tamil April 11, 2026 09:48 PM

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகிலுள்ள நடுநெல்லிமலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கநாதன், தனது பாட்டியாரிடமிருந்து கிடைத்த நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்தார்.

இந்தச் செயல்முறையை முன்னெடுக்க, பாடிப்பள்ளம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த சிங்காரவடிவேல் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

லஞ்சம் வழங்க மறுத்த ரங்கநாதன், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவலர்களிடம் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, காவலர்களின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய பணத்தை சிங்காரவடிவேலிடம் வழங்கிய தருணத்தில், மறைவிடத்தில் கண்காணித்து வந்த லஞ்ச ஒழிப்பு காவலர்கள் அவரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.