நாடாளுமன்றத்தில் அரங்கேறிய நெகிழ்ச்சி: பிரதமர் மோடி - ராகுல் காந்தி இடையேயான அரிய சந்திப்பு!
Seithipunal Tamil April 12, 2026 01:48 AM

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்வு, இந்திய அரசியலில் நீண்ட நாட்களாகக் காணப்படாத ஒரு ஆரோக்கியமான ஜனநாயகப் பண்பை வெளிப்படுத்தியுள்ளது.

சமூக சீர்திருத்தவாதி மகாத்மா ஜோதிபா பூலேயின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

அப்போது, பிரதமர் நரேந்திர மோடியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டு சிறிது நேரம் உரையாடியது அங்கிருந்தவர்களையும் சமூக வலைதளங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரதமர் மோடி தனது வாகனத்திலிருந்து இறங்கி வந்த போது, அங்கு நின்றிருந்த ராகுல் காந்தியைக் கண்டதும் நின்று அவரிடம் பேசத் தொடங்கினார். இருவரும் சில நிமிடங்கள் மிக நெருக்கமாக நின்று, புன்னகையுடன் கருத்தாடல் செய்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

View this post on Instagram

A post shared by Lokmat Times Nagpur (@lokmat_times)