மதுரையில் 2 பள்ளி மாணவிகளை கடத்தி வழக்கு.. 4 பேருக்கு ஆயில் தண்டனை உறுதி செய்த உயர்நீதிமன்றம் !
மதுரையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் கார்த்திகை செல்வம் என்பவரது இரண்டு மகள்களை கடத்திச் சென்று ரூ.50 லட்சம் பெற்றுக் கொண்டு, விடுவித்த வழக்கில் ரவீந்திரன், பிச்சை கண்ணன், மணிராஜ், ஜீவஜோதி ஆகியோருக்கு மதுரை மகிளா நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, உறுதி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மர்மல் கும்பல் கடத்தல்
மதுரையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் கார்த்திகை செல்வம் என்பவரது இரண்டு மகள்களை கடந்த 2017 ஆம் ஆண்டு பள்ளி முடிந்து வீட்டிற்கு ஓட்டுனர் பாண்டி என்பவர் அழைத்து வந்துள்ளார். அப்போது காவல்துறையினர் போல வேடமிட்ட ஒரு கும்பல் இடைமறித்து வாகனத்தின் ஆவணங்களை கேட்டு சரிபார்த்தனர். பின்னர் ஆவணங்களில் குழப்பம் இருப்பதாகவும் தங்களை பின் தொடரவேண்டும் என அழைத்து சென்று கருப்பாயூரணி அருகே ஓட்டுனர் பாண்டியை தாக்கிவிட்டு அவருக்கு மயக்கமருந்தினை ஊசி மூலமாக செலுத்திவிட்டு இரண்டு மாணவிகளையும் மர்ம கும்பல் கடத்தி சென்றுவிட்டது. இது தொடர்பாக ஓட்டுனர் அளித்த தகவலின் அடிப்படையில், சிறுமிகளின் பெற்றோர் தெப்பகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
கடத்தல்காரர்கள் சிறுமியர்களின் தந்தையிடம் பேசும் ஆடியோவை பதிவு செய்து, அவர்களின் செல்போனின் தொடர்பு எண்ணை வைத்து அவர்களின் இருப்பிடங்களை பின் தொடர்ந்தனர்.
2 கோடி கேட்டுள்ளனர்.
இந்நிலையில் கடத்தல் கும்பல் குழந்தைகளை ஒப்படைக்க 2 கோடி கேட்டுள்ளனர். பின்னர் நேரம் போக போக 50 லட்சம்ரூபாய் தருமாறு கேட்டு அதனை ஒரு இடத்தில் ஒப்படைக்குமாறும் கேட்டுள்ளனர். கடத்தல் கும்பலின் கோரிக்கையை ஏற்று 50 லட்சம் வழங்கப்பட்டது. பின்னர் குழந்தைகளை அவர்களது வீட்டின் அருகிலேயே நள்ளிரவில் இறக்கிச் சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் தெப்பகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து இதே பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன், கண்ணன் மணிராஜூ, மணி கண்டன், வைரமுத்து, குணசேகரன், ராதாகிருஷ்ணன், கலாதேவி, என 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விடுதலை செய்து உத்தரவிட்டனர்.
இது குறித்து மதுரை மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மதுரம், கடந்த 2022 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கினார். இதில் குற்றம் சாட்டப்பட்ட 2 பெண்கள் உள்பட 10 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்து, அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். தங்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒருவரை தவிர ஒன்பது பேரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில், ரவீந்திரன் கண்ணன் என்ற பிச்சை கண்ணன், மணிராஜ் , ஜீவஜோதி ஆகிய நான்கு பேருக்கும் மதுரை மகிளா நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, உறுதி செய்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மணிகண்டன், வைரமுத்து, சின்னதுரை, குணசேகரன், கலாதேவி ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டனர்.