விஜய்யின் ஜன நாயகன் படத்தை எப்படியாவது இந்த மாதத்துக்குள் வெளியிட்டு விட வேண்டும் என்கிற முனைப்பில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே லீக் ஆன படத்தை பெரிய தொகை எல்லாம் கொடுத்து வாங்க முடியாது என்றும் ரசிகர்கள் தியேட்டர் பக்கம் வருவது பாதியாக குறைந்துவிடும் என விநியோகஸ்தர்கள் எல்லாம் கம்பி நீட்டி வருகின்றனர்.
கேபிள் டிவியிலேயே படத்தை போட்ட நிலையில், டிஜிட்டல் உரிமம் மற்றும் சாட்டிலைட் உரிமத்துக்கும் சிக்கல் வந்துள்ளது. இந்நிலையில், ஜனநாயகன் படத்தை இந்த வாரமே வெளியிட படக்குழு முயற்சித்தாலும், தேர்தல் முடியும் வரை வெளியிட விஜய்க்கு எதிரானவர்கள் விடமாட்டார்கள் என்றே கூறுகின்றனர்.
இந்நிலையில், ஜன நாயகன் திரைப்படம் வரும் ஏப்ரல் 30ம் தேதி வெளியாகும் என லேட்டஸ்ட் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், அது தனுஷின் ‘கர’ படத்துக்கு கஷ்டத்தை உண்டாக்கும் என்கின்றனர்.
ஏற்கனவே இட்லி கடை படத்தை காந்தாரா 2 உடன் வெளியிட்டு தர்ம அடி வாங்கிவிட்டார் தனுஷ் என்கின்றனர். என்ன தான் ஜன நாயகன் வசூல் குறைந்தாலும் முதல் நாள் விஜய் படத்தை பார்க்கத்தான் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்றும் நல்ல ஓபனிங் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
ஜன நாயகன் மற்றும் கர என 2 படங்களிலும் மமிதா பைஜு நடித்துள்ள நிலையில், ஒரே நாளில் வெளியானால் சிக்கல் தான் என்று தெரிகிறது. ஏப்ரல் 30ம் தேதி ஜன நாயகன் வெளியானால் தனுஷின் கர திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மே 14ம் தேதி சூர்யாவின் கருப்பு படம் வெளியாக உள்ள நிலையில், 2 வார கேப் கட்டாயம் தேவைப்படும்.