பெங்களூரு நாகபுராவில் உள்ள ‘ஸ்ரீ லட்சுமிதேவி ரைஸ் கார்னர்’ கடையில், நள்ளிரவு 3 மணி அளவில் பெண் ஒருவர் 15 தேங்காய்களைத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அந்தப் பெண் ஏற்கனவே பலமுறை இது போன்ற திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், தற்போது இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“>
நள்ளிரவில் அரங்கேறிய இந்தத் தேங்காய் திருட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.