பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி பதவி ஏற்றுக் கொண்டார். பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாம்ராட் சவுத்ரிக்கு பீகார் மாநில ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தொடர்ந்து, பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த இருவர் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டனர்.
பிஜேந்திர பிரசாத் யாதவ், விஜய் குமார் சௌத்ரி ஆகியோருக்கு பிஹார் ஆளுநர் சையத் அட்டா ஹஸ்னைன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பீகார் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.