CBSE வெளியிட்டுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், ஸ்ரீநகரை சேர்ந்த பார்வை திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவி ஜைனப் பிலால் 95 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
500-க்கு 475 மதிப்பெண்கள் பெற்றுள்ள அவர், கணினி அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். எவ்வித உதவியாளரும் இன்றி லேப்டாப் உதவியுடன் தேர்வெழுதிய முதல் பார்வை திறன் குறைபாடுடைய மாணவி ஜைனப் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதிக்க விரும்பும் இவர், ஸ்ரீநகரிலுள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் பயின்றவர். தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
12 வயதிலேயே அமீர் கான் போன்ற பிரபலங்களை நேர்காணல் செய்த திறமைமிக்க இவர், "என்னால் இதை செய்ய முடியும் என்றால், எவராலும் முடியும்; உடல் ஊனமுற்ற குழந்தைகளை அவர்களது பெற்றோர் ஒருபோதும் கைவிடக்கூடாது" என்ற உத்வேகமான செய்தியை பகிர்ந்துள்ளார்.
தடைகளைத் தாண்டி சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஜைனப்பின் இந்த வெற்றி ஒரு மிகப்பெரிய ஊக்கமருந்தாகும்.
Edited by Siva