”தொலைத்த என் இளமைக்காலம் திரும்பக் கிடைக்குமா?” மேடையிலேயே உடைந்த திருமாவளவன்…. கலங்கிய தொண்டர்கள்….!!
SeithiSolai Tamil April 17, 2026 08:48 AM

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தனது அரசியல் போராட்ட வாழ்க்கையில் சந்தித்த வலிகளையும் சவால்களையும் மேடையில் மிகவும் உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காகவும், இந்த இயக்கத்தைக் கட்டமைப்பதற்காகவும் தனது முழு இளமைக்காலத்தையே தான் தியாகம் செய்துள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ”என்னை எப்படியெல்லாம் பழித்தாலும், பொருளாதார ரீதியாக வீழ்த்தப் பார்த்தாலும் நான் கவலைப்படப் போவதில்லை.

ஆனால், இந்த மக்களுக்காக நான் தொலைத்த இளமை மீண்டும் கிடைக்குமா?” என்ற அவரின் கேள்வி அங்கிருந்தவர்களைக் கலங்கச் செய்தது. இத்தனை ஆண்டுகால உழைப்பில் உருவான இந்த அரசியல் வலிமையைத் தேன்கூட்டைப் போலக் கருதுவதாகவும், அதை ஒரு சிலர் திட்டமிட்டு அழிக்கப் பார்ப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். உழைக்கும் தேனீக்களாக மக்கள் விழிப்புடன் இருந்து, இந்தக் கூட்டைச் சிதைப்பவர்களை அடையாளம் காண வேண்டும் என அவர் உரையை நிறைவு செய்த விதம் தற்போது வைரலாகி வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.