மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த பிரேமம் படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவ்ர் சாய் பல்லவி. இன்று தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நாயகியாக நடித்து வருகிறார். குறிப்பாக இஅவ்ரது நடனத்திற்கும், இயல்பான நடிப்பிற்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு.
சமீபத்தில் சமூக வலைதளங்களில் சாய் பல்லவி குறித்த ஒரு தகவல் வேகமாகப் பரவியது. அதில், தன்னை ஒருவர் மலையாளி என்று அழைத்ததால் சாய் பல்லவி கடும் கோபமடைந்ததாகவும், நான் மலையாளி அல்ல, ஒரு தமிழ்ப் பெண் என்று அவர் பதிலளித்ததாகவும் செய்திகள் திரித்து வெளியிடப்பட்டன. இந்தத் தகவல் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த சாய் பல்லவி, நான் மலையாளி அல்ல, தமிழ்ப் பெண் என கூறியதை தவறாக சித்தரித்து, தன்னை மலையாளி அழைத்ததால் சாய் பல்லவி கோபமடைந்தாஎ என பொய்யான தகவல்களை பரப்பினர். 4 ஆண்டுகளுக்கு முன் தந்த பேட்டி தொடர்பான செய்திகள் தவறாக பரவியதை பார்த்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். நான் சொல்லாத விசயங்களை சொன்னதாக என் மீது குற்றம் சுமத்தியது எனக்கு மன வலியை தந்தது. நான் கோயமுத்தூரில் பிறந்து வளர்ந்தவள். தமிழ் என் தாய் மொழி என்பதை மட்டுமே குறிப்பிட்டேன். மற்ற மொழிகள் மற்றும் மக்களை குறைத்து மதிப்பிடும் எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று வருத்தமாக பேசினார்.