இன்று மே 1 முதல் பான் கார்டு விதிகளில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
மே 1 முதல் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டுகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டைப் பயன்படுத்தினால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவது மட்டுமல்லாமல், டிடிஎஸ் (TDS) பிடித்தமும் இரு மடங்காகும்.
புதிய விதிகளின்படி 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாக டெபாசிட் அல்லது பணம் எடுப்பதற்கு பான் கார்டை வழங்குவதும், உடனடியாகச் சரிபார்ப்பதும் கட்டாயமாகும். நகைகள் வாங்குதல் மற்றும் அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளுக்கான விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு தற்போது பிசிக்கல் பான் அட்டைகளை விட இ-பான் கார்டுக்கு முன்னுரிமை அளிக்கிறது. மே 1ஆம் தேதி முதல் இ-பான் கார்டுக்கான விண்ணப்ப செயல்முறை இன்னும் எளிமையாக்கப்படவிருக்கிறது. இது புதிய வரி செலுத்துவோர் உடனடியாக ஒரு டிஜிட்டல் அடையாளத்தைப் பெற அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது.
மத்திய அரசு தற்போது பிசிக்கல் பான் அட்டைகளை விட இ-பான் கார்டுக்கு முன்னுரிமை அளிக்கிறது. மே 1ஆம் தேதி முதல் இ-பான் கார்டுக்கான விண்ணப்ப செயல்முறை இன்னும் எளிமையாக்கப்படவிருக்கிறது. இது புதிய வரி செலுத்துவோர் உடனடியாக ஒரு டிஜிட்டல் அடையாளத்தைப் பெற அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது.
ஏதேனும் அரசு அல்லது வங்கிப் படிவத்தில் நீங்கள் தெரிந்தே தவறான பான் எண்ணை உள்ளிட்டால் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 272B இன் கீழ் உங்களுக்கு 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். மே 1ஆம் தேதி முதல் சரிபார்ப்பு அமைப்பு மேலும் தானியக்கமாக்கப்படுகிறது.
உங்கள் பான் கார்டு செயலிழக்கச் செய்யப்பட்டிருந்தால் 1,000 ரூபாய் தாமதக் கட்டணம் செலுத்தி ஆதார் உடன் இணைப்பதன் மூலம் அதை மீண்டும் செயல்படுத்த வேண்டும். அதைச் செயல்படுத்துவதற்கு 30 நாட்கள் வரை ஆகலாம். எனவே அதை விரைவாகச் செய்து முடிப்பது நல்லது.