கௌதம் மேனன் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்து உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம், சூர்யாவை வைக்க எடுக்க திட்டமிட்டு அவர் இந்த படத்திலிருந்து விலக சீயான் விக்ரமை வைத்து இந்த படத்தை இயக்கினார் கௌதம் மேனன். படம் முடிந்து ரிலீஸுக்கு ரெடியான நிலையில் கௌதம் மேனன் வாங்கிய சில கோடி கடன்களால் இந்த படத்தை வெளியிட முடியவில்லை. அவரும் பலமுறை முயன்றும் இந்த படம் இப்போது வரை ரிலீஸாகவில்லை.
இந்நிலையில்தான், சமீபத்தில் இந்த படம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் துருவ நட்சத்திரம் படத்தை ஜூன் 15ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் இந்த படத்திற்கு இருந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
இந்நிலையில் வருகிற 28ம் தேதி இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். ஒருபக்கம் படம் சில வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டிருந்தாலும் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள Spy Thriller படமாக துருவ நட்சத்திரம் உருவாகியிருப்பதால் கண்டிப்பாக இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என படக்குழு நம்புகிறது. அதோடு ஜெயிலர் பட வில்லன் வினாயகன் இந்த படத்தில் வில்லனாக கலக்கியிருக்கிறாராம். இந்த படம் வெளியானால் அவரும் ஒரு ரவுண்டு வருவார் என்கிறார்கள்..
மொத்தத்தில் துருவ நட்சத்திரம் படம் சியான் விக்ரம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பையும், மகிழ்ச்சியும் கொடுத்துள்ளது. கடந்த பல வருடங்களாகவே விக்ரமுக்கு ஒரு சூப்பர் ஹிட் படம் அமையவில்லை. அந்த குறையை துருவ நட்சத்திரம் போக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..