மணிரத்னத்தை நம்பி 2 மாசம் வேஸ்ட்!.. எல்லோருக்கும் போன் போடும் விஜய் சேதுபதி!….
CineReporters Tamil May 02, 2026 12:48 AM

தனது இயல்பான நடிப்பில் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என சொல்லாமல் காமெடி, கேமியோ, வில்லன் என பலவிதமான கதாபாத்திரங்களில் நடிப்பவர் இவர். அதனால்தன் இவரை ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. மற்ற ஹீரோக்களை போல இப்படியெல்லாம் நடிக்க மாட்டேன் என எந்த கண்டிஷனும் போட மாட்டார்.

பல படங்களில் வயதான தோற்றங்களிலும் நடித்திருக்கிறார்
. கோலிவுட்டின் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படுபவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என கலந்து கட்டி அடித்து வருகிறார். இவரின் முத்து என்கிற காட்டான் வெப் சீரியஸ் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில்தான் மணிரத்தினம் இயக்கவுள்ள புதிய படத்தில் சாய் பல்லவிக்கு ஜோடியாக விஜய் சேது நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கவிருந்த நிலையில் திடீரென மணிரத்தினம் தரப்பிலிருந்து ஷூட்டிங் துவங்க இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என சொல்லிவிட்டார்களாம்..

இந்த படத்திற்காக வேறு எந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளாமல் இருந்தார் விஜய் சேதுபதி. தற்போது படத்தின் ஷூட்டிங் இரண்டு மாதங்கள் தள்ளிப் போவதால் இந்த இரண்டு மாத இடைவெளியில் வேறு ஏதாவது படத்தில் நடிக்கலாம் என நினைத்து யாருக்கு போனை போட்டாலும் சாதகமான பதில் இல்லையாம்.

மகாராஜா 2 படத்தை துவங்கலாமா என நித்திலன் சாமிநாதனிடம் கேட்டால் கதையை எழுதி முடிக்க இன்னும் சில மாதங்களாகும் என்கிறாராம். அதேபோல் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஒரு படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். அந்த படத்தை துவங்கலாமா என்று கேட்டாலும் இன்னும் 3 மாதங்கள் ஆகும் என்கிறாராம்.. ’இரண்டு மாதம் வேஸ்ட்’ என புலம்பி வருகிறாராம் விஜய் சேதுபதி..

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.