மே மாதத்துக்கான வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பை, இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டது. அதில், 'நாட்டின் தென் மாநிலங்கள், வடகிழக்கு பகுதிகள், வடமேற்கு இந்திய பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும்.இமயமலை அடிவாரம், தமிழகம் உள்ளிட்ட கடலோர மாநிலங்களில், இயல்பைவிட வெப்ப அலை அதிகம் காணப்படும். அதேநேரம், நாட்டில் கோடை மழை, இயல்பை விட சற்று அதிகம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில், நேற்று வெயில் சதம் அடித்தது.தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில், நேற்று வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சமாக, வேலுார் மாவட்டத்தில் 107.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருச்சியில் 104.18; சென்னை, மதுரையில் தலா 104; திருப்பத்துார் 103.28; தர்மபுரியில் 102.56; ஈரோடுயில் 102.2; கரூர் பரமத்தியில் 101.84; நாகையில் 101.3; பாளையங்கோட்டையில் 100.4 டிகிரி வெப்பம் பதிவானது.