மே 4 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இன்று திருநெல்வேலியில் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய்க்கு தனது ஆதரவை தெரிவித்து பேசினார்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முடிந்த நிலையில் வரும் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு பின்னான பல்வேறு கருத்துக்கணிப்புகள் தேர்தல் முடிவுகள் குறித்து குழப்பமான மன நிலையை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக தவெக தலைவர் விஜய் இந்த தேர்தலில் எத்தனை சதவீத வாக்குகளை பெறுவார் என்பதுதான் அனைத்து அரசியல் கட்சி மற்றும் மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி. சூரியுடன் இணைந்து இவர் நடித்த மாமன் திரைப்படம் பெரியளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. இன்று திருநெல்வேலி வந்திருந்தபோது பத்திரிகையாளர்களை சந்தித்த ஐஸ்வர்யா லக்ஷ்மி தேர்தலில் விஜய் வெற்றிபெற வேண்டும் என தனது விருப்பத்தை வெளிப்படையாக தெரிவித்தார்.
"எனக்கு விஜய் அண்ணா ரொம்ப பிடிக்கும். நான் கேரளாவில் இருக்கிறேன். எனக்கு இங்கு ஓட்டில்லாதது தான் ரொம்ப கஷ்டமாக இருந்தது. விஜய்க்கு வாக்களிக்க நான் தமிழ்நாட்டில் இருந்திருக்கலாமே என ரொம்ப வருத்தப்பட்டேன். அந்த மனுஷனுக்கு எந்த தேவையுமில்ல. மக்களின் அன்பு ஆதரவு எல்லாமே அவருக்கு இருக்கிறது. அத்தனையும் இருந்து அவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அவருக்கு மக்கள் மீது ஒரு பெரிய அன்பு இருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் அவர் வெற்றிபெற வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது. மக்களுக்கும் அந்த ஆசை இருக்கு என்பதை பார்த்தாலே தெரிகிறது " என் அவர் கூறினார்.
I truly wish #ThalapathyVijay sir wins the Tamil Nadu elections, but since I am based in Kerala, I do not have a vote in Tamil Nadu. So it feels quite disappointing that I cannot vote for him.
— Movies Singapore (@MoviesSingapore) May 2, 2026
- #AishwaryaLekshmi pic.twitter.com/FBZ5Y91LUU