2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கள நிலவரத்தை ஆராய்ந்ததில் இந்த ஒரு விஷயம் மட்டும் மிகத் தெளிவாகத் தெரிவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் களத்தில் இந்த மூன்று தரப்பினரின் தாக்கம் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறும் என்று அவர் கணித்துள்ளார். இவர்களின் ஆதரவைப் பெறும் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் ஜோதிமணியின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.