பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்! Dhinasari Tamil %name%
ஶ்ரீராமஜெயம் ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம
||श्री:||
!!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்
!!ஸ்ரீ:!!
श्री: श्रीमते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
சித்திரை ~ 20 ( 3.5.2026 ) ஞாயிற்றுக் கிழமை
வருடம் ~ பராபவ வருஷம் {பராபவ நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம்~ சித்திரை மாஸம் { மேஷ மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி~ இரவு 2.29 am வரை த்விதீயை பின் த்ருதீயை.
நாள் ~ பானு வாஸரம் (ஞாயிற்றுக்கிழமை)
நட்சத்திரம் ~ 7.00 am வரை விசாகம் பின் அனுஷம்.
யோகம் ~ வரீயான்.
கரணம் ~ தைதுளை / கரஜை.
அமிர்தாதியோகம் ~ அசுபயோகம்.
ராகு காலம்~ மாலை 4.30~ 6.00.
எமகண்டம் ~ மதியம் 12.00 ~ 1.30.
குளிகை ~ மாலை 3.00 ~ 4.30.
நல்லநேரம் ~ 9.00 to 10.30 am & 3.00 to 4.30pm
சூரிய உதயம் ~. காலை 5.57
சந்திராஷ்டமம் ~ மேஷம்.
சூலம் ~ மேற்கு.
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்ததிதி ~ த்விதீயை.
இன்று ~
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः । गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
ஞாயிற்றுக்கிழமை ஹோரை
காலை
6-7. சூரியன். அசுபம்.
7-8. சுக்கிரன். சுபம்
8-9.. புதன். சுபம்
9-10.. சந்திரன். சுபம்
10-11. சனி.. அசுபம்
11-12. குரு. சுபம்
பிற்பகல்
12- 1. செவ்வா. அசுபம்
1-2. சூரியன். அசுபம்
2-3. சுக்கிரன். சுபம்
3-4. புதன். சுபம்
மாலை
4-5. சந்திரன்.சுபம்
5-6 சனி.. அசுபம்
6-7 குரு. சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய (3-5-2026) ராசி பலன்கள் மேஷம்
உயர் அதிகாரிகளால் அலைச்சல் ஏற்படும். பழைய நினைவுகள் மூலம் குழப்பங்கள் ஏற்படும். வியாபாரம் சார்ந்த செயல்களில் பொறுமை வேண்டும். முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். உறவினர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : அலைச்சல் ஏற்படும்.
பரணி : பொறுமை வேண்டும்.
கிருத்திகை : ஆலோசனைகள் கிடைக்கும்.
சிந்தனையில் தெளிவுகள் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணி நிமித்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
கிருத்திகை : தெளிவுகள் பிறக்கும்.
ரோகிணி : புதுமையான நாள்.
மிருகசீரிஷம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
உங்கள் பேச்சுக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பல நாள் நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதில் அமைதி இன்மை ஏற்படும். குடும்பத்தில் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். பொருளாதார செயல்களில் சிந்தித்து செயல்படவும். மற்றவர்கள் மீதான கருத்துகளை குறைத்து கொள்ளவும். எதிர்பார்த்த உதவிகள் சிறு தாமதத்திற்கு பின் கிடைக்கும். சமுக பணிகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
புனர்பூசம் : அமைதி இன்மை ஏற்படும்.
பூசம் : சிந்தித்து செயல்படவும்.
ஆயில்யம் : ஏற்ற இறக்கமான நாள்.
புதிய வீடு மற்றும் மனை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களிடத்தில் புரிதல்கள் அதிகரிக்கும். புதிய முயற்சிக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். கால்நடை மூலம் அலைச்சல் உண்டாகும். ஆன்மிக பணிகளில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மகம் : ஆர்வம் அதிகரிக்கும்.
பூரம் : அங்கீகாரங்கள் கிடைக்கும்.
உத்திரம் : ஈடுபாடுகள் அதிகரிக்கும்.
மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். தொழில்நுட்ப கருவிகள் மூலம் ஆதாயம் ஏற்படும். இசை சார்ந்த துறைகளில் ஈடுபாடுகள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளில் தெளிவான முடிவுகள் கிடைக்கும். செயல்களில் திருப்தியான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : ஆதாயம் ஏற்படும்.
அஸ்தம் : வேறுபாடுகள் மறையும்.
சித்திரை : திருப்தியான நாள்.
தாய் வழி உறவுகளால் ஆதரவான பலன்கள் கிடைக்கும். வியாபார தொடர்பான பயணங்கள் கைகூடும். கருத்துகளுக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். அக்கம் பக்கம் இருப்பவரிடம் பொறுமையுடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களுடன் சுப காரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்
சித்திரை : ஆதரவான நாள்.
சுவாதி : பொறுமையுடன் செயல்படவும்.
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். கல்விப் பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உத்தியோகப் பணிகளில் உழைப்புகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்
விசாகம் : சோர்வுகள் ஏற்படும்.
அனுஷம் : உழைப்புகள் அதிகரிக்கும்.
கேட்டை : அனுசரித்து செல்லவும்.
பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பிறமொழி பேசும் மக்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடிவு பெறும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். தொழிலில் புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மூலம் : அனுபவம் கிடைக்கும்.
பூராடம் : நெருக்கடிகள் உண்டாகும்.
உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.
உறவினர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். பெற்றோரின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். விவேகமான செயல்பாடுகள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். நிர்வாக சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உருவாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திராடம் : புரிதல்கள் மேம்படும்.
திருவோணம் : மேன்மை உண்டாகும்.
அவிட்டம் : வாய்ப்புகள் உருவாகும்.
பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபார முதலீடுகளில் சற்று ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். நெருக்கமானவர்களிடமிருந்த வேறுபாடுகள் மறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் படிப்படியாக குறையும். கால்நடைத்துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சதயம் : வேறுபாடுகள் மறையும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். உயர் கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பழைய வாகனங்களை மாற்றி அமைப்பீர்கள். பணி புரியும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம் நிறம்
பூரட்டாதி : மதிப்புகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : ஆரோக்கியம் மேம்படும்.
ரேவதி : பொறுப்புக்கு கிடைக்கும்.
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். (குறள் 894)
பரிமேலழகர் உரை:
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் – மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று – தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.
மு.வரதராசனார் உரை:
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.
மறை – 2 | பதிகம் – 64 | பாடல் – 8
வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில்
பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே
விளக்கவுரை
மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்
தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்
மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே.
– திருச்சந்த விருத்தம் திருமொழி – 6 (804)
விளக்கம் : காளியும் வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் ஸ்வஜனங்களோடு திரண்ட ஸேனையை அழைத்துக்கொண்டு பயங்கரமான போர்க்களத்திலிருந்து வேகமாக ஓடிப்போன வளவிலே பாணாஸுரனது ஆயிரம் கைகளைஅறித்தொழித்த பரம புருஷனுடைய பெருமைதங்கிய கோயில் காவேரியோடு கூடின திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்.
நன்னம்பிக்கை மொழி!பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil