புரட்சித் தலைவரால் தோற்றுவிக்கப்பட்ட, இதய தெய்வம் அம்மா அவர்களால் கட்டி எழுப்பப்பட்ட பேரியக்கமாம் அஇஅதிமுக கரூரில் 41 பேரை கொன்று குவித்து ஒரு பாசிஸ்டின் பின்னால் செல்வது மிக மிக ஆபத்தானது என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக தலைமை தனது எக்ஸ் தளத்தில், “தற்குறிக்கு ஆதரவு அளிப்பது என்பது அஇஅதிமுகவை குழிதோண்டி புதைப்பதற்கு சமமானது. பீனிக்ஸ் இயக்கமாக மீண்டெழ இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் நாமே கெடுத்துக்கொள்வது போல.தற்குறி ஆட்சியின் அவலங்களை தோலுரித்துக் காட்டுவது தான் அஇஅதிமுகவின் பிரதான வேலையாக இருக்க வேண்டும்.உண்மையான எதிர்க்கட்சி அஇஅதிமுக மட்டுமே என்பதை உணர்த்த வேண்டிய காலம் இதுவே. புரட்சித் தலைவரால் தோற்றுவிக்கப்பட்ட, இதய தெய்வம் அம்மா அவர்களால் கட்டி எழுப்பப்பட்ட பேரியக்கமாம் அஇஅதிமுக கரூரில் 41 பேரை கொன்று குவித்து ஒரு பாசிஸ்டின் பின்னால் செல்வது மிக மிக ஆபத்தானது. தற்குறியை ஆள விட்டு மக்கள் முன் அம்பலப்படுத்துவதே ஒரே நோக்கமாக இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.