ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு
TV9 Tamil News May 12, 2026 10:48 PM

சென்னை, மே 12 : முன்னாள் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து, மாநிலத்தின் 14ஆவது முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், கடந்த மே 11, 2026 அன்று சட்டமன்றத்தில், தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு, தற்காலிக சபாநாயகர் சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து மே 12, 2026 அன்று சட்டமன்ற தலைவராக ஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் தேர்வு செய்யப்படவுள்ளார். இதனைத் தொடர்ந்து, தவெக அரசு தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க மே 13, 2026 அன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஏற்கனவே காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. மேலும், அதிமுக சி.வி.சண்முகம் தலைமையிலான எம்எல்ஏகளும் தவெகவிற்கு ஆதரவளித்துள்ளனர். இதனால் அந்த கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க :நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை தவெக அரசு முன்னெடுக்கவேண்டும்.. மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

மேலும் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் தலைமை செயலாளராக இருந்த முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மெட்ரோ மேலாண்மை இயக்குநர் சித்திக் நிதித்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சுற்றுலா துறை செயலாளராக ஸ்வர்னாவும், டாஸ்மாக் மேலாண் இயக்குநராக நந்தகுமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ராஜினாமா செய்துள்ளார். விரைவில் அந்த பதவியும் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் தவெக. எம்எல்ஏ சபரிநாதன் நியமனம் செய்யப்படட்டுள்ளார். சட்டமன்றத்தில் மே 13, 2026 நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில், அரசு கொறடா நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

78043

மதுக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில் வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களால் உத்தரவிடப்பட்டது. மேற்படி ஆணைக்கிணங்க 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது. வழிபாட்டுத்தலங்கள் பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.