இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னிடம் 3 ஆண்டுகள் தனது அலுவலகத்தில் தங்கி இருந்ததாக நடிகை சோனா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நயன்தாராவை தனக்கு ரொம்ப பிடிக்கும் என்பதால் விக்னேஷ் சிவனுடனான உறவு குறித்து தன்னால் வெளிப்படையாக பேச முடியாது என சோனா இந்த பேட்டியில் கூறியுள்ளது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது .
போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர். இப்படம் வசூல் ரீதியாக வெற்றிபெறா விட்டாலும் பரவலாக ரசிக கவனத்தை ஈர்த்தது. அடுத்தபடியாக விஜய் சேதுபதி நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தை இயக்கி கமர்சியல் ஹிட் கொடுத்தார். இந்த படத்தின் போது நயன்தாராவுடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு தற்போது உயிர் உலகு என இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அண்மையில் எல்.ஐ.கே திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தது.
விக்னேஷ் சிவனின் முதல் படமான போடா போடி தோல்வியை சந்தித்தபோது அவர் நடிகை சோனாவிடம் 3 ஆண்டுகள் வேலை செய்து வந்தார். இதுகுறித்து நடிகை சோனா தற்போது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்
விக்னேஷ் சிவன் கூறுகையில் " விக்னேஷ் சிவன் என்னுடைய அலுவலகத்தில் தான் 3 ஆண்டுகள் தங்கியிருந்தார். அதற்கு மேல் என்னால் எதுவும் வெளிப்படையாக சொல்ல முடியாது. எனக்கு நயன்தாராவை ரொம்ப பிடிக்கும் . என்னைப் போல தான் நயன்தாராவும் நிறைய அடிகளை வாங்கி இன்று தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கி இருக்கிறார். விக்னேஷ் சிவன் ஒரு கெட்ட நபர் எல்லாம் கிடையாது. ஆனால் பழசை எல்லாம் மறந்துட்டானோ என்கிற ஒரு வருத்தம் இருக்கிறது. ஆனால் எங்கள் இருவரது வாழ்க்கையும் மாறிவிட்டது அவ்வளவுதான் " என சோனா இந்த பேட்டியில் பேசியுள்ளார்.